
இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தித்தாள் ஒன்றினால் நடத்தப்பட்ட பொது கருத்துக் கணிப்புகளில் 96% மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்ற கருத்துக்கு 96 வீதமானோர் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வரையறுக்கப்பட்ட நிபுணர் அமைச்சரவையை உள்ளடக்கிய அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் இந்த 96 வீதத்தினரும் விருப்பம் வெளியிடடுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமா? அத்துடன் வரையறுக்கப்பட்ட நிபுணர் அமைச்சரவையை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமா என்பது குறித்தே பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 2.1% பேர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்று விருப்பம் வெளியிட்டிருந்தனர்.
1.2% பேர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமே பதவி விலகவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
0.7% பேர் இதில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை