விநியோகத்துக்கு தேவையான எரிபொருளுக்கு தட்டுப்பாடு! – தாங்கி ஊர்திகள் சங்கம்

இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக தாங்கி ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலனறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

எனினும், சில எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த மக்கள், எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *