
அரசியல் வாதிகளிடம் உள்ள மேலதிக பணங்களை திறைசேரிக்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மக்கள் இப்போது அல்லல் படுகின்றனர்.அதற்கு தீர்வும் இல்லை .ஆனால் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு,இன்று பல மணிநேரங்களை செலவிட்ட நாம்,இன்று வரை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.
திறைசேரியில் நிதி இன்மையால் சாதாரண மக்களுக்கு தேவையான பல திட்டங்கள் சென்றைடையவில்லை.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு யார் வருகிறீர்கள் என்று இங்கே ஆளும் கட்சி உறுப்பினர் சவாலாக கேட்கும் போது ஒருவர் கூட கை உயர்த்தவில்லை.ஆகவே முதலில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
அதற்கு அரசியல்வாதிகள் உழைத்த மேலதிக நிதியை ,வரி செலுத்தாத நிதியை திறைசேரிக்கு வழங்க வேண்டும்.
வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள டொலர்களை இங்கே கொண்டு வந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
சுமார் 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் இவ்வாறு வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது என்றார்.