ஹோட்டல் ஒன்றில் பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்பு!

பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply