வவுனியாவில் உயிரிழந்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி

<!–

வவுனியாவில் உயிரிழந்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி – Athavan News

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க்குக்கு, நேற்று (சனிக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில், அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் ஆகியோர் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply