காலிமுகத்திடலில் 30ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கம் மொத்தமாக வெளியேற வேண்டி மக்கள் சிறப்பு பரிகாரங்களில் ஈடுபட்டனர் .

மேலும் காளி அம்பாள் பூஜையின் சிறப்புப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *