
மேசன் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கட்டடப் பொருட்களின் அதிக விலை காரணமாக தற்பொழுது சிமெண்டின் விலை 2700 தொடக்கம் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் அத்துடன் கட்டட இதர பொருட்கள் அனைத்துமே பல மடங்கு விலை அதிகரித்ததன் காரணமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்ட வேலைகளையும் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான பணத்தையும் தமது சொந்தப் பணத்திலேயே செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2000 ரூபா கூலி பணத்தில் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிமெண்டின் விலை அதிகரித்ததன் காரணமாக பல வேலைகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.