பாணந்துறையில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

காலி – கொழும்பு பிரதான வீதி, எகொடஉயனபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்தவரை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்தத்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply