ஐ.பி.எல்.: மிட்செல் மார்ஷின் அதிரடியான துடுப்பாட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 58ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஸ்வின் 50 ஓட்டங்களையும் படிக்கல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், சேட்டன் சக்கரியா, நோட்ஜே மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 89 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்Nவுந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் 62 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *