ஊரடங்கு சட்டம் தளர்வு – எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!

நாட்டில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

திருகோணமலை – முள்ளிப்பொத்தானையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இன்றையதினம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை யாவரும் அறிந்த விடயமே. ஆனாலும் இன்றுமதியம் 2.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதையடுத்து பெற்றோலுக்காக முந்தி அடித்துக் கொள்வதை காண முடிகிறது.

ஊரடங்கு சட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் இரு நாட்கள் இடம்பெறவில்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடிக்காணப்பட்டன.

தற்போது காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசை காணப்படுவதுடன், பல மணி நேரங்களை இங்கு செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் டீசல் விநியோகம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *