சஜித்தின் பிரதான கட்சியில் பெரும் பிளவு – ஹரினின் முடிவை பின்பற்றப்போகும் மேலும் சிலர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உட்பட்டவர்களும் ஹரினை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஹரின் பெர்ணான்டோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்க முடியும் என்றபோதிலும், சஜித் பிரேமதாச அதற்கான முடிவை எடுக்காமையே ஹரினின் முடிவுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது, சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *