இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகிய நிலையில் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு இன்று காலை நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடி குறித்த நிகழ்வு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால் விசேட அதிரடிப்படைக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியுள்ளனர்.

