
கொழும்பு, மெ 12
ஆட்பதிவு திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை இன்றைய தினம் முன்னெடுக்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையினை பெற்றுக் கொள்ளும் வகையில் முன்பதிவு செய்த அனைத்து நபர்களும் பிரிதொரு வேலை நாளில் சேவையினை பெற்றுக் கொள்ள முடியுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.