
ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவர் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அவர்களில் 11 பேர் நேற்று இரவு ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் நெருக்கடியைப் போக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் நாட்டுக்குத் தேவை என்றும் அவர் கூறினார்.