முள்ளிவாய்க்கால் நினைவு வார ஆரம்பத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரினரால் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்:
இன அழிப்பு வாரம் இன்று ஆரம்பித்திருக்கின்றது. மே 12 முதல் மே 18 வரை உலகம் எங்கும் ஈழத் தமிழர் அனுஷ்டிக்கின்ற வாரமாக இது இருகின்றது. எம் இளம் சமுதாயத்திற்கு எமது வலிகளை கடத்தும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ சகோதரர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இலங்கையினுடைய ஆட்சியாளர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட்ட வேண்டும்.
சிறிலங்கா தேசமானது நீதிக்கான சர்வதேச குற்றவியல் பிரிவில் நிறுத்தப்பட்டு எங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும்.
இதற்கு பரிகார ரீதியாக தமிழர் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது எனது பிரதான வேண்டுகோள் என்றார்.


