நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை! ஹரீன் எம்.பி அதிரடி

நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை. சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவோ அல்லது அநுரகுமார திசாநாயக்கவோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்க வேண்டும்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தி செய்யவில்லை என்றால் மாத்திரமே நான் சுயாதீனமாக இயங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *