எங்களுடைய அடிப்​படை உரிமை மீறப்பட்டுள்ளது! மனுத்தாக்கல் செய்த தமிழ் கைதிகள்

அனுராதபுரம் வெலிகடைச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் விரட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களுடைய அடிப்​படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் SCFR 297/2021 செய்துள்ளனர்.

குறித்த மனுத்தாக்கலை தங்களுடைய சட்டத்தரணி மொஹான் பாலேந்திரன் ஊடாக தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகிய இருவரும் இந்த வழக்கில் ஆஜராகுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *