எமக்கு மரணச் சான்றிதலோ, நஷ்ட ஈடோ வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளே வேண்டும் என யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உப தலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
யாழ். ஐக்கிய நாடுகள் அலுவலக முன்றலில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், எமது பிள்ளைகள் உறவுகளை நீண்ட காலமாக பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றோம். தற்போதைய அரசாங்கம் எமக்கு மரணச் சான்றிதலையும், நஷ்ட ஈட்டையும் கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட நினைக்கின்றது.
ஆனால், எமது பிள்ளைகள் எமக்கு உயிரோடு வேண்டும். அது தவறும் பட்சத்தில் எங்களையும் மரணித்து விடுங்கள்.
நாங்கள் மரணச் சான்றிதலையோ நஷ்ட ஈட்டயோ என்றுமே ஏற்க மாட்டோம் என அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
![](https://storage.googleapis.com/samugammedia-storage/2021/10/b5ccea8c-whatsapp-image-2021-10-01-at-10.12.14-am.jpeg)
![](https://storage.googleapis.com/samugammedia-storage/2021/10/1e8a6356-whatsapp-image-2021-10-01-at-10.12.13-am.jpeg)