தென் மற்றும் ஊவா மாகாண பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த திகதியில்பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ​தென் மாகாணத்தில் உள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், தென் மாகாணத்தில் அமைந்துள்ள 514 பாடசாலைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *