இலங்கை பாடகியைக் காண குவிந்த ரசிகர்கள்!

இலங்கைப்பாடகி யொஹானி சில்வாவின் முதலாவது இந்திய இசை நிகழ்ச்சிp நேற்று ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், யொஹானி சில்வாவை காண புது டெல்லி விமான நிலையத்தில் நான்கரை லட்சம் ரசிகர்கள் ஒன்று கூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது முதல் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை, ஆயிரக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு முன்னால் ஒரு இலங்கை பாடகி பாடுவது இதுவே முதல் தடைவ எனவும் கூறப்படுகிறது.

மேலும், யொஹானி ஒக்டோபர் 3 ஆம் திகதி ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பாடல் ஒன்று சர்வதேச ரீதியாக பிரபல்யம் அடைந்த முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *