திருமலையில் சிக்கிய மூவாயிரம் கிலோவிற்கும் அதிக மீன்கள்!

திருகோணமலை, கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3,000 கிலோகிராமிற்கும் அதிக பாறை மீன்கள் பிடிபட்டுள்ளன.

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் ஜெயா பேபி என்பவரின் வலையிலேயே இந்த மீன்கள் சிக்கியுள்ளன.

இவ்வாறு பிடிபட்ட பாறை மீன்களின் பெறுமதி சுமார் ரூபா 15 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில், பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *