கொரோனா தொற்று உறுதியான 644 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 644 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 518,526 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 47ஆயிரத்து 535 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 597 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 458,085 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *