யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தில் இன்று அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
நாவற்குழி மேற்கிலுள்ள வீடொன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த திருடர்கள், வீட்டிலிருந்த தாயையும், மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதலில் 17 வயதான மகனின் கை உடைந்துள்ளதாகவும், 42 வயதான தாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும், மகனும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பத் தலைவரை இழந்த அந்த குடும்பம் வறுமை நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.