![](https://athavannews.com/wp-content/uploads/2021/10/earth-quick-1.jpg)
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.22 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.