யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஒரு குடும்ப பெண்ணின் உயிரிழப்பு!

யாழ்ப்பானம் உடுப்பட்டி பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 6 ஆம் திகதி தீ காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவரே ஆவார்

இதனைத்தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தினங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 08ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *