மன்னாரில் எரிவாயு விற்பனை நிலையத்தில் குழப்பம்! (படங்கள் இணைப்பு)

மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளதுடன் முகவர் மற்றும் பொது மக்கள் மத்தியில் வாய்தர்கம் ஏற்பட்டுள்ளது

குறித்த எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்னால் 10 நாட்களுக்கு மேலாக பலர் எரிவாயு சிலிண்டர்களை எரிவாயு பெறுவதற்காக அடுக்கி வைத்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சிலர் சிலிண்டருக்கு காவல் நின்றுள்ளனர்.

10 நாட்கள் கடந்தும் எரிவாயு குறித்த முகவர் நிலையத்திற்கு கிடைக்க பெறாத நிலையில் அவ் எரிவாயு சிலிடர்களும் அடுக்கப்பட்டு விற்பனை நிலையத்திற்க்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(11) மதியமளவில் குறித்த எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயி சிலிண்டர்களை தூக்கி எரிந்ததுடன் வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய்தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக எரிவாயு சிலிண்டர்களளை அடுக்கி வைத்து காவல் காத்து கொண்டிருந்த பொது மக்கள் எரிவாயு விற்பனை நிலைய முகவருக்கு எதிராக  பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!

ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *