விரைவில் இந்தியாவிலிருந்து உரம் நாட்டுக்கு வரும்: மெத்சிறி

கொழும்பு,ஜீன் 12

இந்திய கடன் திட்டத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் முதல் தொகுதி எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய முதல் தொகுதியாக 40 ஆயிரம் மெற்றிக்தொன் உரம் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே தற்போதுள்ள உரத் தொகையை தேசிய உர செயலகத்துடன் இணைந்து மாவட்ட ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிடம் இருந்து உரம் கிடைத்தவுடன் உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *