
காலி,ஜுன் 12
காலி வீதியின் போக்குவரத்து மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியிலிருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.