மே மாதத்தின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு!

மே மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஐஊஊ விருது வழங்கி வருகிறது.

ஜனவரி மாதம் முதல் 3 மாதங்கள் தொடர்ந்து இந்திய வீரர்கள் இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கான விருது பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மே மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரராக இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், அஞ்சலோ மத்தியூஸ் இரண்டு சதங்கள் உட்பட 344 ஓட்டங்களை குவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *