இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்குவார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், 12 தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட சகலருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், 12 – 15 வயதிற்குட்பட்ட நோய்களால் பாதிக்கப்படாத ஆரோக்கியமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.