மன்னாரில் கடும் மழை: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடும் மழை பெய்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள மையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *