![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2021/10/download.jpg)
இலங்கையின் எரிபொருள் விநியோக பிரந்நினையைத் தீர்ப்பதற்காக 360 கோடி டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டவுள்ளது.
குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டள்ளதாகவும் இரு நாடுகளும் இந்தத் திட்டத்தைத் தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வரையில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
12 மாகாலத்துக்கு எரிபொருளை வாங்கும் வகையில் 360 கோடி டொலர் நிதியுதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது தொடர்பான பேச்சில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2021/10/download.jpg)