15 ம் திகதிக்கு பின் மாற்றமா? இராணுவ தளபதி அறிவிப்பு

நாட்டில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், அவ்வாறே தொடரும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து கலந்துரையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *