இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 263 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 49 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 346 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடியே 38 இலட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் 29 ஆயிரத்து 639 பேர், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடியே 31 இலட்சத்து 50 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 2 இலட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் கொரோான வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *