இந்திய இழுவைப் படகு குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி  சேதப்படுத்திய தோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று  12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை  கக்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர்  இலங்கை மீன்பிடி  படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை செயதுள்ளார்கள்

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது குறிப்பாக அத்துமீறிய  இந்திய மீனவர்கள் எமது படகினை  சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த போதிலும் இலங்கை மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர்யூலியன் சகாயராஜா  இவ்வாறு தெரிவித்துள்ளார். ”

இந்திய இழுவை  படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில்  அமைச்சு மட்டத்தில்  முறையிட்டுள்ளோம் இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும் இந்த பிரச்சனையானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *