வடக்கில் 680 பாடசாலைகளை 21 ஆம் திகதி ஆரம்பிக்கலாம்! – ஆளுநர் சார்ள்ஸ்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் இணைந்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1 தொடக்கம் 5 வரையிலான வகுப்புக்களுக்கு வட மாகாணத்தில் உள்ள 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், அனைத்து மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *