அச்சுவேலியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும், காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆதாம்பாவா முகம்மது றவுஸ் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில்; அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *