நயினாதீவில் கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் திறப்பு!

நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ்.நயினாதீவில் உள்ள ஏழு வட்டராத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால், ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவியில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் மாவட்ட பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள்; இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குடிநீர்த் திட்டத்தில் 150 கன மீற்றர் குடிநீராக்கும் நிலையமாக காணப்படுகின்றது. இதற்காக 187 மில்லியன் ரூபா செலவில் திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக 5,000 குடும்பங்கள் நன்மைபெறவுள்ளனர்.

இந்த குடிநீரை 120 ரூபா செலவில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், அவற்றை ஒரு யூனிட் 10 ரூபாவாக அறவிட்டு நன்னீரை பெற்றுக் கொள்ள முடியும் என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *