
முல்லைத்தீவு,ஜுன் 30
முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.
முல்லைத்தீவில் உள்ள பாடசாலையொன்றின் மாணவிகளை, பாடசாலையின் ஆசிரியர் ஒருவரும் சில மாணவர்களும் இணைந்து துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியிருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில், குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரும், 6 மாணவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், குறித்த ஆசிரியரும் மாணவர் ஒருவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐந்து மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.