ரூ.40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது

கொழும்பு, ஜுலை 02

ரூ.40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் 16 தங்க பிஸ்கட்டுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *