
கொழும்பு, ஜூலை 02
எதிர்வரும் வாரம் முதல் மேலும் சில எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையுள்ளதாக லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஜூலை மாதத்தில் எதிர்வரும் 13 . 14. 29 30 ஆகிய திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக ஐ ஓ சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 மற்றும் 15 ஆகிய திகதிகளிலும் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லங்கா ஐ ஓ சி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.