22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் குற்றச்சாட்டு

கொழும்பு, ஜுலை 02

22 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

திருத்தங்களுக்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *