பாம்பு தீவில் பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

கருங்கடலில் இருந்து ரஷ்யா தனது படைகளை மீளப் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு, பாம்பு தீவில் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 18:00 மணியளவில் ரஷ்ய விமானப்படை எஸ்.யு-30 ரக போர் விமானங்கள் மூலம் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனிய இராணுவத்தின் தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்.

கருங்கடலில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைப்பதற்கான ஐ.நா. முயற்சிகளில் ரஷ்யா தலையிடாது என்பதை நிரூபிக்கும் வகையில், வியாழன் அன்று தீவில் இருந்து பின்வாங்குவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்தது.

ஆனால், பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன இராணுவ தளவாடங்களை திரும்ப கொண்டு செல்ல முடியவில்லை. எனவே இராணுவ தளவாடங்களை அழிக்க ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான பயன்பாடாக பாஸ்பரஸ் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு சர்வதேச மாநாட்டின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் இராணுவ இலக்குகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பெப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து, பொதுமக்கள் பகுதிகள் உட்பட, பல முறை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.

பாம்பு தீவு உக்ரைனிய கடற்கரையில், டான்யூப் டெல்டாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ளது. மேலும் போர் தொடங்குவதற்கு முன்பு உக்ரைனிய எல்லைப் புறக்காவல் நிலையமாக ஏற்கனவே தடைசெய்யப்பட்ட இராணுவப் பகுதியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *