சீதகல்ல இயற்கை கடல் தடாகத்தில் நீராடச் சென்ற பல்கலை இளைஞர்களில் இருவர் மீட்பு!

மாத்தறை – தலல்ல – சீதகல்ல இயற்கை கடல் தடாகத்தில் நீராடச் சென்ற ருஹூணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சுமார் 17 மாணவர்கள் குறித்த பகுதிக்கு நேற்று சென்றுள்ளனர். அவர்களில் நீரில் அள்ளுண்டு சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் காலி – தல்கம்பளை பகுதியை சேர்ந்த 22 வயதான மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, காலி வீதியின் அம்பலாங்கொடை – உஸ்முதுனாவ முதல் ஹிக்கடுவை – குமாரகந்த சந்தி வரையிலான பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

கடலலை மேலெழுந்து வீதிக்கு சென்றமையினால் இவ்வாறு குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *