தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையர்கள் இருவரில் ஒரு வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற வயோதிப பெண், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *