
கொழும்பு,ஜுலை 3
வைத்தியர்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியை அண்மித்து காணப்படும் இராணுவ முகாமில் எரிபொருளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க 95 எரிபொருள் நிலையங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட போதிலும், எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட வைத்திய சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய வைத்தியர்களுக்கு மாத்திரம் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.