
தம்புள்ள,ஜுலை 03
எரிபொருள் வழங்குமாறு கோரி நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தம்புள்ளை இனமாலுவில் உள்ள ஐஓசி பெற்றோல் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் கையிருப்பு தீர்ந்து விட்டதாக பெற்றோல் நிலைய ஊழியர்கள் கூறியதையடுத்து, நிலத்தடி களஞ்சிய தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு கோரி, பிரதான வீதியை மறித்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென ஐவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தம்புள்ளை, அடவரஹேன, சீகிரிய, கந்தளே மற்றும் கிரித்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள், வரிசையில் காத்திருந்தமக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த சிலர் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது மோதலாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காவியன்