மீண்டும் மூடப்படும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் – இருளில் மூழ்குமா இலங்கை ?

நுரைச்சோலை “லக்விஜய” நிலக்கரி மின்நிலையத்தில் உள்ள மற்றொரு 300 மெகாவாட் மின் உற்பத்தி அலகு பெரிய மறுசீரமைப்பிற்காக மூடப்படவுள்ளது.அதேபோன்ற ஒரு அலகின் தற்போதைய பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் என்.எஸ். இளங்ககோன் தெரிவிக்கையில்:

யூனிட் 2 இன் தற்போதைய பராமரிப்பு நடவடிக்கைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அது மீண்டும் செயல்படத் ஆரம்பித்தவுடன் , யூனிட் 3 அதன் திட்டமிட்ட பராமரிப்புக்காக மூடப்படவுள்ளது.

இதற்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேவைப்படும்.இதனால் 300 மெகாவாட் மின்சாரம் இழக்கப்படுவதைக் தடுக்க வேண்டும். இதற்காக மின்சார சபை எரிபொருள் மற்றும் நீர்மின் உற்பத்தியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அலகு 3 இன் பராமரிப்பு திட்டமிடப்பட்ட போதிலும், அலகு 2 மற்றும் 3 க்கு தேவையான உதிரிபாகங்கள் இன்னும் கொள்வனவு செய்யப்படவில்லை என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *