
கொழும்பு,ஜுலை 03
நாட்டுக்கு டீசல் அடங்கிய இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளிலும் 11 மற்றும் 14 ம் திகதிகளிலும் நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜீலை மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் பெற்றோல் இடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் IOC நிறுவனத்தின் ஊடாக டீசல் கப்பலொன்று 15 மற்றும் 17ஆம் திகதியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.