பரிமாணம் –…

பரிமாணம் – அரசியல் கட்டுரை

எழில்மிகு இலங்கை திரு நாட்டின் இழி நிலைக்கு யார் பொறுப்பு?
-கேதீஸ் புவிநேசராஜா –

வளங்கள் நிறைந்த இலங்கைத் திருநாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியையும், உணவுத்தட்டுப்பாட்டையும் எதிர் கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு காரணம் இந்த நாடு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் இலங்கை திருநாட்டின் கொள்கை வகுப்பாளர்களின் மாபெரும் தவறே காரணமாகும்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடே 1950 ஆம் ஆண்டிலிருந்து இங்கு இனவாதம் தலைதூக்க தொடங்கிவிட்டது.

வளம்மிகு இந் நாட்டின் வளங்களை சரியாக பயன்படுத்தி இலங்கையை முன்னேற்றுவதற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவங்களை விட சிறுபான்மை மக்களை குறிப்பாக தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் அடக்குமுறைகளை பிரயோகித்து இனவாதம் பேசி மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து அதிலிருந்து அரசியல் செய்து தேர்தலை வெல்வதும் பதவிகளைத் தக்க வைப்பதிலுமே இலங்கையை ஆண்டு வந்த ஒவ்வொரு தலைவர்களினதும் நோக்கமாகஇருந்துள்ளது.உதாரணமாக 1950ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம், தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமை,இனக் கலவரங்களை தூண்டி விட்டமை எனக் கூறிக்கொண்டே செல்லலாம்.

அவ்வாறே இன அழிப்பின் ஒரு உச்சக்கட்டமே 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை குறிப்பிடலாம்.சொந்த நாட்டுக்குள்ளேயே மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். யுத்தத்தில் அரச இராணுவமாக இருந்தாலும் சரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் சரி எல்லோருமே இலங்கையின் வளங்கள் பல இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த யுத்தத்தை ஆரம்பத்தில் ஆட்சியாளர்கள் தவிர்த்திருக்கலாம் ஆனால் யார் காலில் விழுந்தாவது கடன்களைப் பெற்று வளங்களை அழித்துதும் உச்சக்கட்டம் வரை நகர்த்தப்பட்டு இருந்தது உள் நாட்டு யுத்தம்.

இறுதியாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான அணுகுமுறையே இன்று இலங்கைத் திருநாடு கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணமாகும். இதனை யாரும் இலகுவாக மறுத்துவிட முடியாது.

பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது என்று தெரிந்தும் அதனைச் சீர் செய்யவதற்கு எடுக்க வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது இனவாதத்தை பேசி நாட்டின் பொருளாதார நிலைமையின் உண்மைத்தன்மையை மூடிமறைத்து பூசி மெழுகி தங்கள் கட்சியை வளர்ப்பதிலும் ஆட்சியை தக்க வைப்பதிலும்,அடுத்த இருபது வருடங்களுக்கு எவ்வாறு ஆட்சி செய்யலாம் என்பதற்கு மாத்திரம் அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்று இலங்கை திருநாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து மக்களுமே இன்று சொல்லுனா துயரை அனுபவித்துக் கொண்டிருக்க காரணமாகும்.
நடந்த தவறுகள் என்ன என்பதை அறிந்து இனியாவது அவற்றை சீர் செய்வதற்குரிய உளமார்ந்த நடவடிக்கைகள் சிங்கள அரசியல் தலைவர்களால் இப்போதும் எடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மக்களைப் பொறுத்தமட்டில் இலங்கை திருநாடு எமது தாய் நாடு என்ற சிந்தனையிலும், எதிர்நோக்கும் இன்னல்களில் இருந்து விடுபட்டு இலங்கையர்களாக ஒற்றுமையாக நாட்டை எவ்வாறு மீட்டெடுக்கலாம் எனும் அந்த எண்ணமே ஒவ்வொரு மக்கள் மனதிலும் அவதானிக்க முடிகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் இனவாதத்தை கைவிடாது இலங்கையை மீண்டும் குட்டி சுவராக்கும் முயற்சிகளையும் ஒருபக்கம் சில பேரினவாத சக்திகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது தற்போதும் வெளிப்படை. அதற்கு ஒரு உதாரணம் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஒருவரின் கருத்து மிகவும் அருவருக்கத்தக்கது.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தை பார்த்தோமானால் அங்கு கூடியிருக்கும் இன மத மொழி பேதமற்ற மக்களின் சிந்தனைக்கும் இனவாதம் பேசும் அரசியல் தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகின்றது.

மேற்கத்தைய நாடுகள் போன்று தங்கள் நாடுகளை உலக மாற்றத்திற்கேற்ப பொருளாதார ரீதியாக வளர்த்தெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாழ்வை வளப் படுத்துகின்ற சிறந்த பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கின்ற அதனை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைமிக்க தரப்பு களுக்கே இனி மக்கள் தங்கள் ஆணையை வழங்குவார்கள் என நம்புவோம் அவ்வாறானதொரு மாற்றம் நிகழ்ந்தால் மாத்திரமே வளமிகு எழில்மிகு இலங்கை திருநாட்டை காப்பாற்ற முடியும்.

இனவாதம் பேசி மக்களிடையே பிரிவினையை தூண்டி அதனூடாக வாக்குகளைப்பெற்று ஆட்சிகளை கைப்பற்றி ஆட்சிக்காலத்தில் தங்கள் அரசியலை வளர்க்கின்ற நோக்கத்தோடு வரும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் இதுவே இன்று இலங்கை திருநாட்டின் நேசிக்கும் ஒவ்வொரு மக்களினதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

சிறந்த தலைமைகளை தெரிவு செய்கின்ற பொறுப்பு மக்களுக்கு இருக்கின்ற அதேவேளை சுய பொருளாதாரத்தை வளர்க்க தங்கள் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாய் மாற்றி தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஊடாக நாட்டின் வளர்ச்சியையும் முன்னோக்கி நகர்த்த வேண்டியதும் இலங்கை குடிமக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இலங்கை ஆசியாவிலேயே மிகவும் முக்கியமான வளங்கள் நிறைந்த சிறந்த நாடு.இங்கு நாம் எந்தத் துறையில் கல்வி கற்றாலும் எந்த துறையில் பணி செய்தாலும் விவசாயம் என்பவற்றுக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவமளிக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுதுளி பெருவெள்ளம் போன்று விவசாய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுதல் வீட்டுத் தோட்டங்களை செய்தல் போன்ற தன்னிறைவு பொருளாதார செயற்பாடுகளிலும் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், அவ்வாறே அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்குவதோடு மாத்திரம் நின்று விடாது சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் சுய தொழிலை வினைத்திறனாக்க உதவி பெரும் மக்கள் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று புத்தாக்க முயற்சியாளர்கள், இளம் தொழில் முனைவோர்கள், சுய தொழிலில் ஈடுபடுபவர்கள்,மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் பிரதேசம் இனம்,மொழி, பேதம் பாராது, அவர்கள் இலங்கையின் வளங்கள் என்ற அடிப்படையில் அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். இவற்றுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறாக இலங்கையின் ஒவ்வொரு குடிமகனில் இருந்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வரை மாற்றம் விரைந்து வர வேண்டியது காலத்தின் அவசர கட்டாயமாகும். இந்த மாற்றங்களே விழுந்து கொண்டிருக்கும் இலங்கையை மீள உயர்த்தி நிறுத்துவதற்கு உதவும். நிலைமையின் உண்மைத்தன்மையை மூடிமறைத்து,பூசி மெழுகி தங்கள் கட்சியை வளர்ப்பதிலும் ஆட்சியை தக்க வைப்பதிலும்,அடுத்த இருபது வருடங்களுக்கு எவ்வாறு ஆட்சி செய்யலாம் என்பதற்கு மாத்திரம் அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்று இலங்கை திருநாட்டின் சிங்கள,தமிழ்,முஸ்லிம் என அனைத்து மக்களுமே இன்று சொல்லொனா துயரை அனுபவித்துக் கொண்டிருக்க காரணமாகும்.
நடந்த தவறுகள் என்ன என்பதை அறிந்து இனியாவது அவற்றை சீர் செய்வதற்குரிய உளமார்ந்த நடவடிக்கைகள் சிங்கள அரசியல் தலைவர்களால் இப்போதும் எடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மக்களைப் பொறுத்தமட்டில், இலங்கை திருநாடு எமது தாய் நாடு என்ற சிந்தனையிலும், எதிர்நோக்கும் இன்னல்களில் இருந்து விடுபட்டு இலங்கையர்களாக ஒற்றுமையாக நாட்டை எவ்வாறு மீட்டெடுக்கலாம் எனும் அந்த எண்ணமே ஒவ்வொரு மக்கள் மனதிலும் அவதானிக்க முடிகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் இனவாதத்தை கைவிடாது இலங்கையை மீண்டும் குட்டி சுவராக்கும் முயற்சிகளையும் ஒருபக்கம் சில பேரினவாத சக்திகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது தற்போதும் வெளிப்படை. அதற்கு ஒரு உதாரணம் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஒருவரின் கருத்து மிகவும் அருவருக்கத்தக்கது.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தை பார்த்தோமானால் அங்கு கூடியிருக்கும் இன, மத, மொழி பேதமற்ற மக்களின் சிந்தனைக்கும் இனவாதம் பேசும் அரசியல் தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரிகின்றது.

மேற்கத்தைய நாடுகள் போன்று தங்கள் நாடுகளை உலக மாற்றத்திற்கேற்ப பொருளாதார ரீதியாக வளர்த்தெடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாழ்வை வளப் படுத்துகின்ற சிறந்த பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கின்ற அதனை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைமிக்க தரப்பு களுக்கே இனி மக்கள் தங்கள் ஆணையை வழங்குவார்கள் என நம்புவோம். அவ்வாறானதொரு மாற்றம் நிகழ்ந்தால் மாத்திரமே வளமிகு எழில்மிகு இலங்கை திருநாட்டை காப்பாற்ற முடியும்.

இனவாதம் பேசி மக்களிடையே பிரிவினையை தூண்டி அதனூடாக வாக்குகளைப்பெற்று ஆட்சிகளை கைப்பற்றி ஆட்சிக்காலத்தில் தங்கள் அரசியலை வளர்க்கின்ற நோக்கத்தோடு வரும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதுவே இன்று இலங்கை திருநாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மக்களினதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

சிறந்த தலைமைகளை தெரிவு செய்கின்ற பொறுப்பு மக்களுக்கு இருக்கின்ற அதேவேளை சுய பொருளாதாரத்தை வளர்க்க தங்கள் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாய் மாற்றி தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஊடாக நாட்டின் வளர்ச்சியையும் முன்னோக்கி நகர்த்த வேண்டியதும் இலங்கை குடிமக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இலங்கை ஆசியாவிலேயே மிகவும் முக்கியமான வளங்கள் நிறைந்த சிறந்த நாடு.இங்கு நாம் எந்தத் துறையில் கல்வி கற்றாலும்,எந்த துறையில் பணி செய்தாலும் விவசாயம் என்பவற்றுக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவமளிக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுதுளி பெருவெள்ளம் போன்று விவசாய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுதல் வீட்டுத் தோட்டங்களை செய்தல் போன்ற தன்னிறைவு பொருளாதார செயற்பாடுகளிலும் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், அவ்வாறே அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்குவதோடு மாத்திரம் நின்று விடாது சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் சுய தொழிலை வினைத்திறனாக்க உதவி பெரும் மக்கள் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று புத்தாக்க முயற்சியாளர்கள், இளம் தொழில் முனைவோர்கள், சுய தொழிலில் ஈடுபடுபவர்கள்,மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் பிரதேசம் இனம்,மொழி, பேதம் பாராது, அவர்கள் இலங்கையின் வளங்கள் என்ற அடிப்படையில் அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். இவற்றுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறாக, இலங்கையின் ஒவ்வொரு குடிமகனில் இருந்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் வரை மாற்றம் விரைந்து வர வேண்டியது காலத்தின் அவசர கட்டாயமாகும். இந்த மாற்றங்களே விழுந்து கொண்டிருக்கும் இலங்கையை மீள உயர்த்தி நிறுத்துவதற்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *